பத்மாவத் என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் அலாவுதீன் கில்ஜியின் வரலாறு என்று கூறி பல அவதூறுகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் விரிவாக ஆராயலாம். படத்திற்கு செல்லலாம்.ராணி பத்மாவதி மீது காதல் கொண்டு அலாவுதீன் கில்ஜி, சித்தூரையே அழித்ததாகவும், அப்பாவி பெண்கள் தீக்குளித்து மாண்டதாகவும் சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட பத்மாவதி, திரைப்படத்தின் கதை முழுக்க முழுக்க கட்டுக்கதையே ...
அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே அலாவுதீன் கில்ஜி மேற்கொண்ட, நடவடிக்கைகள், அவரது சிந்தனைகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.ஒரு முறை தனது அறையில் ஆழ்ந்த யோசனையில் இருந்த அலாவுதீன் கில்ஜியிடம், என்ன யோசித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், இறைவன் எவ்வளவோ மனிதர்களை படைத்திருந்தாலும், அவர்களில் பெரும் பகுதியினருக்கு ...
இன்று பூரண மதுவிலக்கு என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருந்போம். ஆனால் எங்கும் பூரண மதுவிலக்கு கிடையாது. மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலம் என்பார்கள். ஆனால், உயர்குடியினர், பணக்காரர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்படும் என அறிவிப்பார்கள். நம் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களே மது ஆலைகளை நடத்தி, அதன் ...
இன்று நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிராக குழந்தைகளுக்கு எதிராக எத்தனையோ பாலியல் குற்றங்கள் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அரபு நாட்டு தண்டனை வழங்க வேண்டும் என்றெல்லாம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால் ஒரு காலத்தில் நம் இந்திய நாட்டிலேயே பாலியல் ...
அலாவுதீன் கில்ஜியை மதவெறி பிடித்த முஸ்லீம் மன்னர் என ஒரு புறமும், ஒழுங்கக் கெட்ட முஸ்லீம் மன்னர் என மறுபுறமும், வரலாறு என்ற பெயரில் அவதூறு நெருப்பை பற்ற வைக்கின்றனர். உண்மையில் அலாவுதீன் கில்ஜி, இஸ்லாத்தை எப்படி பார்த்தார், அதனை பின்பற்றினாரா என்பதை அறிந்தால், ஆச்சர்யம், சுவாரஸ்யம் அதிகரிக்கும். உண்மையில் அலாவூதீன் கில்ஜி யதார்த்த மனிதராக ...
மங்கோலிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் அலாவுதீன் கில்ஜி. உலகத்தையே வென்ற மங்கோலியர்களின் வீரம், போர் தந்திரங்கள் எதுவும் அலாவுதீன் கில்ஜியிடம் எடுபடவில்லை.அடுத்தடுத்த 2 போர்களில் அலாவுதீன் கில்ஜியிடம் தர்ம அடி வாங்கிய மங்கோலியர்கள் சரியான நேரத்தை பார்த்து 3வது போரை தொடங்கினர்.போர்க்களத்தில் எதிரிகளை வெட்டிச்சாய்ப்பவன் வீரன், தன்னை விட எதிரியின் பலம் ...
அலாவுதீன் கில்ஜி மங்கோலியர்களுக்கு எதிராக பெருவெற்றி பெற முக்கியக் காரணம் அவருடைய வீரமிக்க, விசுவாசமிக்க தளபதிகள். அவர்களில் ஒருவர் தான் ஜாபர்கன். முதல் முறை மங்கோலியர்களை விரட்டியடித்த அலாவுதீன் கில்ஜி, 2வது போரிலும் வெற்றிபெற முக்கியக் காரணமாக இருந்தவர் ஜாபர்கான். ஒரு ராணுவத் தளபதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இருந்தவர் ஜாபர்கான். ...
20 ஆயிரம் மங்கோலியர்களை கைதிகளாக பிடித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அலாவுதீன் கில்ஜி!மங்கோலியர்கள் தங்களை கான்களுக்கெல்லாம் கான் என அழைத்துக் கொண்டனர். அதன் அர்த்தம், அரசர்களுக்கெல்லாம் அரசன். ஆனால் அந்த கான்களையே தனது காலடியில் போட்டு மிதித்து, அதன் மீது அரியணை போட்டு அமர்ந்தவன் தான் மாவீரன் அலாவூதின் கில்ஜி. இந்திய தேசியவாதிகளால் கொண்டாடப்பட வேண்டிய ...
தற்போதைய ஈரானில் உள்ள அழகிய ஊர் தான் நிஷாப்பூர். நீல பச்சை ரத்தினக்கற்களை உலகிற்கு வழங்கும் ரத்தின சுரங்கங்கள் மிகுந்த நகரம். அந்நகர் மங்கோலியர்களின் கரத்தில் வீழ்ந்தது. ஆட்சியாளராக செங்கிஸ்கானின் மருமகன் துக்குச்சர் என்பவன் அறிவிக்கப்பட்டான். அந்த வெற்றியை கொண்டாடும் முன்பே மர்ம நபரின் அம்பு வீச்சில் செங்கிஸ்கானின் மறுமகன் துக்குச்சர் கொல்லப்பட்டான்.இதனால் செங்கிஸ்கானின் செல்ல ...
இந்திய தேசியத்தை ஆதரிக்கும் யாரும், முதலில் கொண்டாட வேண்டிய ஆளுமை அலாவுதீன் கில்ஜி. இவன் காலத்தில் இந்துஸ்தான் உலக ராணுவ வல்லரசுகளில் ஒன்றாக இருந்தது. பொருளாதாரத்தில் இன்றைய அமெரிக்காவை விஞ்சி இருந்தது. கட்டுக் கோப்பில் இன்றைய சீனாவை விஞ்சி இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட நபரைத் தான், குறுகிய மதக் கண்ணோட்டத்தோடு, கொடூர அரக்கனமாக சித்தரித்துள்ளனர், நவீன ...










