ஈரானுக்கு ஆதரவாக இருப்பது போல் காட்டிக் கொள்ளும் சவுதி…
அதே நேரம் இஸ்ரேல் கோபித்துக் கொள்ளாத வகையில் கண்டன அறிக்கை…
மன்னர் ஆட்சியின் கோமாளித்தனங்கள் அம்பலம்..
ஈரான் மீதான தாக்குதல், அந்நாட்டின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேலின் பெயரை சவுதி அரேபியா குறிப்பிடவில்லை.
சவுதி வெளியுறவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இரு தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும். பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர, சர்வதேச சமூகம் முன் வர வேண்டும். என்றும் கூறியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் நிகழ்த்திய இனப்படுகொலையில் சுமார் 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். ஆனால் அண்டை முஸ்லீம் நாடான சவுதி அரேபியா இதனை கண்டுகொள்ளாததால், அந்நாட்டின் ஆட்சியாளர்கள் மீது இஸ்லாமிய உலகம் கடும் கொந்தளிப்பில் உள்ளது.
தான் கொலை செய்யப்படலாம் என சவுதி இளவசர் சல்மான் நேரடியாகவே அமெரிக்காவிடம் அச்சத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இஸ்லாமிய உலகத்தின் ஆத்திரத்தை நீர்த்துப் போகச் செய்யும் விதமாக, ஈரானுடன் இணைந்து செங்கடலில் ராணுவ ஒத்திகை நிகழ்ச்சி நடத்த சவுதி முதன்முறையாக முன்வந்தது.
ஈரான் தான் தற்போது, காசா விவகாரத்தில் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறது. இதனால் ஷியா நாடு என்ற எல்லைகளை தாண்டி, உலகம் முழுவதும் உள்ள சுமார் 200 கோடி இஸ்லாமியர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. இதனால் ஈரானுடன் நெருக்கம் காட்டுவது போல் சவுதி நடித்து வருவதாக கருதப்படுகிறது.
==========






Leave a Reply