இஸ்ரேலின் 2 விமானப்படை தளங்களை தாக்கி அழித்த ஹெஸ்புல்லா!

ஹெஸ்புல்லா போராட்டக்குழுவினர் நடத்திய பதிலடி தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் 2 விமானப்படை தளங்கள் மற்றும் 2 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டன.

லெபனானில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் படுகொலைகளுக்கு ஹெஸ்புல்லா போராளிகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். நேற்று லெபனானின் தெற்கு எல்லையில் “கைபர் சீரிஸ் ஆப்ரேஷன்” என்ற பெயரில் 3 தொடர் தொலைதூர ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இஸ்ரேலால் ஆக்கிரமிப்பட்ட நகரமான ஹைஃபாவில் உள்ள ஸ்டெல்லா மாரிஸ் கடற்படை தளம், இஸ்ரேலின் அதிகமான விமான நடவடிக்கைகளைக் கொண்ட ரமாட் டேவிட் மற்றும் டெல் நோஃப் விமான தளங்கள் மீது ஹெஸ்புல்லா போராளிகள் ராக்கெட் தாக்குதலை நடத்தினர். இதில் 2 விமானத்தளங்களும், 2 பாதுகாப்பு கவச வாகனங்களும் அழிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.