40 ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியில் திரும்பும் அமைதி!

துருக்கியின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலனவர்கள் இஸ்லாமியர்கள். எனினும் அங்கு தனி நாடு கேட்டு 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களின் தலைவர் அப்துல்லா ஓக்கலான். இவர் 1999 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தீவு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.குர்துகளின் PKK கட்சியை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக துருக்கி அறிவித்தது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இதனை பிற்பற்றி வருகின்றன. இந்நிலையில் குர்துகளின் தலைவர் அப்துல்லா ஓக்கலானை, எர்டோகானின் தூதூவர்கள் சந்தித்து, பேசி, 40 ஆண்டுகால உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

எர்டோகானின் முக்கிய கோரிக்கையான, ஆயுதங்களை கீழே போடுதல் என்ற நிபந்தனையை குர்துகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது எர்டோகான் அரசுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.காரணம் இரு தரப்பு போரின் விளைவாக இதுவரை இரு தரப்பிலும் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் ஆசாத்தை அரசை அகற்றியதில் துருக்கிக்கு முக்கிய பங்கு உள்ளது. இதனைத் தொடர்ந்து, குர்து பிரச்னையையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதால், மத்திய கிழக்கில் மீண்டும் முக்கிய சக்தியாக துருக்கி உருவெடுக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.