காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
காசா மீது ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வருவது போர் அல்ல இனப்படுகொலை என கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், காசா போர் தொடர்பாக தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிர்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கேலண்டுக்கும் ஆகியோருக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட 124 ICC உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டிற்குள் இவர்கள் நுழைந்தால் கைது செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காசா மக்களுக்கு கிடைக்க வேண்டிய உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய ஆதாரங்களை வேண்டுமென்றே இஸ்ரேல் தடுத்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கையும் ஒருமனதாக நிராகரிப்பதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.







