எதிர்வரும் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்குள் அனைத்து இஸ்ரேல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும், ஒருவர், இருவர் என விடுவிக்கக் கூடாது என்றும் இல்லாவிட்டால், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள இஸ்ரேலை அனுமதிப்போம் என டொனால்டு டிரம்ப் கூறி இருந்தார்.இதுகுறித்து ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள ஹமாஸ் அமைப்பின் அதிகாரி, சமி அபு சுக்ரி, டொனால்டு ...
இதுகுறித்து ஹமாசின் ராணுவப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிர்வாகம் தொடர்ந்து உடன்படிக்கையை மீறி செயல்பட்டு இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கான பிராயச்சித்தம் கிடைக்கும் வரை, கைதிகள் விடுதலையை நிறுத்தி வைக்கிறோம்.வடக்கு காசாவுக்கு திரும்புபவர்களை காத்திருக்க வைப்பது, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்துவது, நிவாரணப்பொருட்களை ...
காசா மக்களை அங்கிருந்து யாராலும் வெளியேற்ற முடியாது, என்றும் அதனை துருக்கி அனுமதிக்காது என அந்நாட்டின் அதிபர் தையிப் எர்டோகான் தெரிவித்துள்ளார்.செய்தியாளர் கூட்டத்தில் பேசிய எர்டோகன், பாலஸ்தீனிய மக்களை அவர்களது தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றும் எந்தவொரு திட்டத்தையும் துருக்கி உறுதியாக எதிர்க்கிறது என்பதை தெளிவுபடுத்தினார்.”எங்கள் கண்ணோட்டத்தில், சியோனிச லாபியின் அழுத்தத்தின் கீழ் டிரம்ப் இந்த கருத்தை ...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படைகள் கொடூரமான தாக்குதலை நடத்தி கருவில் உள்ள குழந்தையுடன் கர்ப்பிணி பாலஸ்தீனியப் பெண்ணை கொடூரமாக கொலை செய்துள்ளனர். மேற்கு கரை பாலஸ்தீனப் பகுதிகள் முழுவதும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில். இந்தத் தாக்குதல் , மனித உரிமைக் குழுக்கள் மற்றும் பாலஸ்தீனிய ...
காசா இனப்படுகொலைகளை வேடிக்கை பார்த்த சவுதி, தனி பாலஸ்தீன நாடு என்ற கொள்கையில் உறுதி காட்டத் தொடங்கியுள்ளது. பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தில் இருந்து இடம்பெயர்வது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சமீபத்திய கருத்துக்களை கண்டித்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டிற்கு சவுதி வெளியுறவு அமைச்சகம் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.இந்த அறிக்கையில், அரபு ...
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாக, காஸாவின் நெட்சாரிம் வழிதடத்திலிருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக பின்வாங்கியுள்ளன. இந்த நடவடிக்கை நடந்து வரும் மோதலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.நெட்சாரிம் வழிதடம் என்பது வடக்கு காஸாவை மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கும் நிலப்பகுதி ஆகும். போரின் தொடக்கத்தில் இஸ்ரேலால் நிறுவப்பட்ட இந்த ...
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேர் உட்பட 183 பாலஸ்தீனியர்கள் விடுதலை…6 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்ட ஹதேம் அல் ஜோசி விடுதலை…பெரும் சோதனைகளை கடந்து சாதித்து காட்டிய ஹமாஸ்…5வது முறையாக ஹமாஸ் 3 இஸ்ரேலிய ஆண் கைதிகளை விடுவித்துள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் சிறையில் இருந்து 183 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் இதுவரை 21 இஸ்ரேலியர்களை ...
தனி பாலஸ்தீன நாடு தேவை என்றால், அதனை சவுதி அரேபியாவுக்குள் உருவாக்கிக் கொள்ளலாம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளதற்கு எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நெதன்யாகுவின் பேச்சு தரக்குறைவானது, சவுதி அரேபியாவின் இறையாண்மையை நேரடியாக தாக்கியுள்ளது. சவுதியின் பாதுகாப்பு என்பது, எகிப்து நாட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. சவுதியை ...
காசாவில் இருந்து 3 இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து, இஸ்ரேல் சிறைகளில் கொடுமைகளை அனுபவித்து வந்த 183 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல் கைதிகள் விடுவிக்கும் நிகழ்ச்சியை வழக்கம் போல் ஹமாஸ் பிரமாண்டமாக நடத்தியது. இதில் ஹமாசின் ஆயுதம் தாங்கிய போராளிகள் 100க்கணக்கானோர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான காசாவாசிகளும் வழக்கம் போல் குவிந்திருந்தனர். அதே போல் மறுபுறம், 183 ...
ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா அலி கமெனியை, ஹமாசின் உயர்மட்டத் தலைவர்கள் தெக்ரானில் சந்தித்து பேசினர். இதுகுறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹமாசின் ஆலோசனைக்குழுத் தலைவர் முகமது இஸ்மாயில் தர்வீஸ், பொலிட் பீரோ இணைத் தலைவர் கலீல் அல் ஹய்யா, மேற்குக் கரைத் தலைவர் ஜாஹிர் ஜபரின் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.பாலஸ்தீன பிரச்னை என்பது, ...










