இதுகுறித்து ஹமாசின் ராணுவப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிர்வாகம் தொடர்ந்து உடன்படிக்கையை மீறி செயல்பட்டு இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கான பிராயச்சித்தம் கிடைக்கும் வரை, கைதிகள் விடுதலையை நிறுத்தி வைக்கிறோம்.வடக்கு காசாவுக்கு திரும்புபவர்களை காத்திருக்க வைப்பது, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்துவது, நிவாரணப்பொருட்களை தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஆக்கிரமிப்பு ஈடுபடுகிறது. ஆனால் எங்கள் தரப்பில் நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் மிகச்சரியாக நிறைவேற்றி வருகிறோம்.

ஹமாசின் இந்த அறிவிப்பு இஸ்ரேல் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறைக்கைதிகளின் குடும்பத்தினர், பெஞ்சமின் நெதன்யாகு வேண்டு மென்றே அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக ஒப்பந்ததை மீறுவதாக கூறி, சிறைவாசிகளின் குடும்பத்தினர் டெல் அவிவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனிடையே சனிக்கிழமை நண்பகலுக்குள் அனைத்து இஸ்ரேல் கைதிகளையும் விடுதலை செய்யாவிட்டால், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள இஸ்ரேலுக்கு அனுமதி அளித்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். கைதிகளை மொத்தமாக விடுவிக்க வேண்டும் என்றும், ஒருவர், இருவர், 3 பேர் என விடுவிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் உளறியுள்ளார்.
=====






