காசா மக்களை அங்கிருந்து யாராலும் வெளியேற்ற முடியாது, என்றும் அதனை துருக்கி அனுமதிக்காது என அந்நாட்டின் அதிபர் தையிப் எர்டோகான் தெரிவித்துள்ளார்.செய்தியாளர் கூட்டத்தில் பேசிய எர்டோகன், பாலஸ்தீனிய மக்களை அவர்களது தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றும் எந்தவொரு திட்டத்தையும் துருக்கி உறுதியாக எதிர்க்கிறது என்பதை தெளிவுபடுத்தினார்.”எங்கள் கண்ணோட்டத்தில், சியோனிச லாபியின் அழுத்தத்தின் கீழ் டிரம்ப் இந்த கருத்தை ...

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாக, காஸாவின் நெட்சாரிம் வழிதடத்திலிருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக பின்வாங்கியுள்ளன. இந்த நடவடிக்கை நடந்து வரும் மோதலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.நெட்சாரிம் வழிதடம் என்பது வடக்கு காஸாவை மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கும் நிலப்பகுதி ஆகும். போரின் தொடக்கத்தில் இஸ்ரேலால் நிறுவப்பட்ட இந்த ...

தனி பாலஸ்தீன நாடு தேவை என்றால், அதனை சவுதி அரேபியாவுக்குள் உருவாக்கிக் கொள்ளலாம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளதற்கு எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நெதன்யாகுவின் பேச்சு தரக்குறைவானது, சவுதி அரேபியாவின் இறையாண்மையை நேரடியாக தாக்கியுள்ளது. சவுதியின் பாதுகாப்பு என்பது, எகிப்து நாட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. சவுதியை ...

சவுதி அரேபியாவிடம் நிறைய நிலம் உள்ளது. அங்கு வேண்டுமானால், தனி பாலஸ்தீன நாட்டை உருவாக்கலாம் என போர்க்குற்றவாளியும், இஸ்ரேல் பிரதமருமான பெஞ்சமின் நெதன்யாகு திமிர் பேச்சு பேசியுள்ளார்.அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சவுதி அரேபியாவுடன் உறவை சுமூகப்படுத்தும் ஒப்பந்தம் நிறைவேறும் என தான் நம்புவதாக கூறியுள்ளார்.அதே நேரம் ஒரு போதும், தனி பாலஸ்தீன நாட்டை அனுமதிக்க ...

டிரம்ப் மட்டும் அல்ல, காசா மக்களை யாரும் அவர்களது நிலத்தில் இருந்து வெளியேற்ற முடியாது, அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என எகிப்து அதிபர் பர்த் அப்துல் லத்தி தெரிவித்துள்ளார்.போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 3 கட்டங்களும் முழுமையாக நிறைவேறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எகிப்து தீவிரமாக எடுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். காசா மக்கள் எகிப்து ...

சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திடீரென அந்நாட்டிற்குள் புகுந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள், கோலான் குன்றுகள் பகுதியில் உள்ள சில கிராமங்களை கைப்பற்றி தொடர்ந்து அங்கு தங்கியுள்ளன.சிரியாவின் புதிய ஆட்சியாளர் அகமது அல் ஷாரா, இஸ்ரேலுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்றும், இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுபவர்களை அனுமதிக்க மாட்டோம் என்றும், சிரியா ...

இஸ்ரேலிய கைதிகள் Keith Siegel, Ofer Kalderon, Yarden Bibas ஆகிய 3 பேர் வடக்கு மற்றும் தெற்கு காசாவில் வைத்து, சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு நிகராக 90 நீண்ட கால கைதிகள் உள்ளிட்ட 183 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.காசா சிட்டி பகுதியில் நடைபெற்ற விடுதலை நிகழ்ச்சியின் போது, ஹமாசின் ராணுவப் பிரிவான அல் ...

லெபனானில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேல், காசாவில் மட்டும் அதனை அமல்படுத்த மாட்டேன் என அடம்பிடித்து வருகிறது. இதற்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும், காசாவில் நாளுக்கு நாள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் கொடூர தாக்குதல் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே காசாவை கைவிடமாட்டோம் என ஹெஸ்புல்லா தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேலுக்கு ...

தெற்கு லெபனானின் எல்லையில் அமைந்துள்ள நகரமான மார்காபாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைக்கும், ஹெஸ்புல்லா போராட்டக்குழுவினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையை முன்னேறவிடாமல் தடுக்க பதுங்கியிருந்தும் தாக்கும் தந்திரத்தை ஹெஸ்புல்லா பின்பற்றி வருகிறது. நேற்று இரவு சரியாக 10 மணி அளவில் இஸ்ரேல் தரைப்படையைச் சேர்ந்த ஆக்கிரமிப்பு வீரர்கள் மீது ஹெஸ்புல்லா, ...

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக ஹெஸ்புல்லா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. நேற்று வடக்கு அரபு நகரமான ஷ்ஃபார்ம் மீது தொடர்ந்து 5 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று டெல் அவிவ்-யில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் மீது பல இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஹெஸ்புல்லா போராட்டக்குழு லெபானில் இருந்து டெல் அவிவ் ...