இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக ஹெஸ்புல்லா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. நேற்று வடக்கு அரபு நகரமான ஷ்ஃபார்ம் மீது தொடர்ந்து 5 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று டெல் அவிவ்-யில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் மீது பல இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹெஸ்புல்லா போராட்டக்குழு லெபானில் இருந்து டெல் அவிவ் நோக்கி Fateh (ஃபதே) 110 ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகவும், குறைந்தது இருவர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் புதுப்புது கோரிக்கைகளை முன்வைப்பதோடு, ஹெஸ்புல்லாவின் கோரிக்கையை நிராகரித்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் காசா – இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ளது. மேலும் காசாவிற்கு ஆதரவாக ஈரான், ஏமன், லெபனான் போன்ற நாடுகளும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை தும்சம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.






