டெல்அவிவ் உள்ளிட்ட 2 நகரங்களை குறிவைத்த ஹிஸ்புல்லா…
சுமார் 30 பேருக்கு மேல் காயம் அடைந்ததாக தகவல்…
இஸ்ரேலின் தலைமை நகரான டெல் அவிவ் புறநகர் பகுதிகளான டிரா மற்றும் ஹசரான் மீது ஹிஸ்புல்லா சரமாரி ராக்கெட்டுகளை வீசியுள்ளது. இதில் சிலவற்றை இஸ்ரேல் ஐயன் டோம்கள் தடுத்தாலும், சில ஏவுகணைகள் கட்டிடங்களை தாக்கியுள்ளன.
இதில் டிரா நகரத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். ஹசரானில் 19 பேர் காயம் அடைந்துள்ளனர். எனவே இது மிகப்பெரும் தாக்குதலாக கருதப்படுகிறது. இந்த தாக்குதல்களுக்கு பாலிஸ்டிக் மிசல்ஸ்களை ஹிஸ்புல்லா பயன்படுத்தி இருப்பதாக உறுதி படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதல்கள் காரணமாக சில மணி நேரம் தொடர்ந்து அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இதனால் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதாள அறைகளுக்கு சென்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை லெபனானின் பெக்கா பகுதியில் இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 72 பேர் காயம் அடைந்துள்ளனர். இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.






Leave a Reply