ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதா, காசாவில் அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ உரையில், இஸ்ரேலிய போர் அச்சுறுத்தல்கள் இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க வழிவகுக்காது , இஸ்ரேலுக்கு ஏமாற்றத்தையே விளைவிக்கும் என்று கூறியிருக்கிறார்.இஸ்ரேலின் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் இஸ்ரேலிய கைதிகளின் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று அபு ஒபைதா எச்சரித்தார். மேலும் அனைத்து சாத்தியக்கூறுகளுக்கும் தயாராக இருப்பதாகவும், மீண்டும் சண்டையிடுவது இஸ்ரேலின் பிம்பத்தை மேலும் சேதப்படுத்தும் என்றார்.
![Ragıp Soylu on X: "Al-Qassam spokesperson Abu Ubaida: “The number of [Israeli] prisoners is many times greater than what Netanyahu announced, and they are present in all axes in the Gaza Strip,](https://pbs.twimg.com/media/F73sOPIWYAAqFkd.jpg)
இஸ்ரேல் தனது கடமைகளை மீறுவதாக குற்றம் சாட்டிய போதிலும், மத்தியஸ்தம் செய்யும் நாடுகளை மதிக்கும் விதமாக, போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான ஹமாஸின் உறுதிப்பாட்டை அபு ஒபைதா மீண்டும் உறுதிப்படுத்தினார்.காசா மக்கள் இனப்படுகொலை, பட்டினி மற்றும் இடப்பெயர்ச்சியை எதிர்கொள்வதாக கூறிய அபூ ஒபைதா, பாலஸ்தீன கண்ணியத்தைப் பாதுகாக்க உலகளாவிய முஸ்லிம் சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாலஸ்தீன கைதிகளின் அவல நிலையைப் புறக்கணித்து, இஸ்ரேலிய கைதிகள் மீது மேற்கத்திய நாடுகள் கவனம் செலுத்துவதை விமர்சித்த அபூ ஒபைதா, கைதிகள் விஷயத்தில் உலகளாவிய பார்வை இரட்டைத் தரநிலைகயாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.தேவைப்பட்டால் இஸ்ரேலைத் தாக்கத் தயாராக இருப்பதாகக் கூறிய ஏமன் அன்சருல்லா அமைப்பு கூறி இருந்தது, பாலஸ்தீனக் கோரிக்கைக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் அன்சருல்லா அமைப்பிற்கு அபு ஒபைதா நன்றி தெரிவித்துள்ளார்.






Leave a Reply