இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.இந்தப் பேச்சுவார்த்தையில் கத்தார், எகிப்து, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், அதனை ஏப்ரல் மாதம் வரை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.2ஆம் கட்ட போர் நிறுத்தத்தை இஸ்ரேல் தொடங்காததால், ஹமாசும் கைதிகள் விடுதலையை நிறுத்தி வைத்துள்ளது.


இதனால் காசாவுக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்த இஸ்ரேல், நிவாரணப் பொருட்கள் விநியோகத்தையும் ஏற்கனவே நிறுத்தியது.இதனால் மீண்டும் காசாவில் பதற்றம் வெடித்தது. இந்த நிலையில் தான் தோகாவில் இந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.






Leave a Reply