ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படைகள் கொடூரமான தாக்குதலை நடத்தி கருவில் உள்ள குழந்தையுடன் கர்ப்பிணி பாலஸ்தீனியப் பெண்ணை கொடூரமாக கொலை செய்துள்ளனர். மேற்கு கரை பாலஸ்தீனப் பகுதிகள் முழுவதும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில். இந்தத் தாக்குதல் , மனித உரிமைக் குழுக்கள் மற்றும் பாலஸ்தீனிய ...

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாக, காஸாவின் நெட்சாரிம் வழிதடத்திலிருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக பின்வாங்கியுள்ளன. இந்த நடவடிக்கை நடந்து வரும் மோதலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.நெட்சாரிம் வழிதடம் என்பது வடக்கு காஸாவை மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கும் நிலப்பகுதி ஆகும். போரின் தொடக்கத்தில் இஸ்ரேலால் நிறுவப்பட்ட இந்த ...

காசாவில் இருந்து 3 இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து, இஸ்ரேல் சிறைகளில் கொடுமைகளை அனுபவித்து வந்த 183 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல் கைதிகள் விடுவிக்கும் நிகழ்ச்சியை வழக்கம் போல் ஹமாஸ் பிரமாண்டமாக நடத்தியது. இதில் ஹமாசின் ஆயுதம் தாங்கிய போராளிகள் 100க்கணக்கானோர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான காசாவாசிகளும் வழக்கம் போல் குவிந்திருந்தனர். அதே போல் மறுபுறம், 183 ...

ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா அலி கமெனியை, ஹமாசின் உயர்மட்டத் தலைவர்கள் தெக்ரானில் சந்தித்து பேசினர். இதுகுறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹமாசின் ஆலோசனைக்குழுத் தலைவர் முகமது இஸ்மாயில் தர்வீஸ், பொலிட் பீரோ இணைத் தலைவர் கலீல் அல் ஹய்யா, மேற்குக் கரைத் தலைவர் ஜாஹிர் ஜபரின் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.பாலஸ்தீன பிரச்னை என்பது, ...

காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும், ஆக்கிரமிப்பு வீரர்களின் மரணங்கள் தொடர்ந்து வருகின்றன. காசாவில் இருந்து முற்றிலுமாக ஆக்கிரமிப்பு வீரர்கள் வெளியேற வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தி வந்த நிலையில், தொடர்ந்து மக்களை கண்காணிக்கும் நோக்கில், உயர்மட்ட கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஆக்கிரமிப்பு படைகள் ஈடுபட்டு வந்தன.இந்த சூழலில் அங்கு ...

டிரம்ப் மட்டும் அல்ல, காசா மக்களை யாரும் அவர்களது நிலத்தில் இருந்து வெளியேற்ற முடியாது, அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என எகிப்து அதிபர் பர்த் அப்துல் லத்தி தெரிவித்துள்ளார்.போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 3 கட்டங்களும் முழுமையாக நிறைவேறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எகிப்து தீவிரமாக எடுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். காசா மக்கள் எகிப்து ...

இஸ்ரேலிய கைதிகள் Keith Siegel, Ofer Kalderon, Yarden Bibas ஆகிய 3 பேர் வடக்கு மற்றும் தெற்கு காசாவில் வைத்து, சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு நிகராக 90 நீண்ட கால கைதிகள் உள்ளிட்ட 183 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.காசா சிட்டி பகுதியில் நடைபெற்ற விடுதலை நிகழ்ச்சியின் போது, ஹமாசின் ராணுவப் பிரிவான அல் ...

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. காசா மீது ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வருவது போர் அல்ல இனப்படுகொலை என கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், காசா போர் தொடர்பாக தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில், இஸ்ரேலிய ...

சவூதியின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை இனப்படுகொலை என கண்டித்துள்ளார். காசா மற்றும் லெபனான் மீது போர் தொடங்கியதில் இருந்து முதன் முறையாக சவூதி இளவரசர் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக இனப்படுகொலை என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியிருப்பது இஸ்ரேல் மீது உலக நாடுகளின் பார்வையை திருப்பியுள்ளது. ...

வடக்கு காசா பகுதியில் நடந்த சண்டையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. வடக்கு காசாவில் ஜபாலியாவிற்கு அருகேயுள்ள பெய்ட் லஹியா என்ற இடத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு படை செயல்பட்டு வருகிறது. நேற்று இவர்கள் பதுங்கியிருந்த கட்டிடத்தின் மீது ஹிஸ்புல்லா போராட்டக்குழு ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 4 ...