ஹமாஸ் தாக்குதல்… ஆக்கிரமிப்பு வீரர்கள் பலி !

வடக்கு காசா பகுதியில் நடந்த சண்டையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

வடக்கு காசாவில் ஜபாலியாவிற்கு அருகேயுள்ள பெய்ட் லஹியா என்ற இடத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு படை செயல்பட்டு வருகிறது. நேற்று இவர்கள் பதுங்கியிருந்த கட்டிடத்தின் மீது ஹிஸ்புல்லா போராட்டக்குழு ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 4 இஸ்ரேல் வீரர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட படை வீரர்கள் அனைவரும் கஃபிர் படைப்பிரிவின் ஷிம்ஷோன் பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இருவருக்கு 21 வயது, இருவருக்கு 20 வயது என இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால் நேற்று காசா மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஜபாலியா என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றை குறிவைத்து குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து எவ்வித எச்சரிக்கையும் விடுக்காமல், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தான் 4 ஆக்கிரமிப்பு வீரர்கள் பலியாகியுள்ளனர்.

ஆனால் காசா மீதான தனது தாக்குதலை மூடி மறைக்கும் விதமாகவும், சொந்த நாட்டு மக்களிடம் பச்சாதாபம் தேடவும் இறந்த இளம் வீரர்களின் படங்களை செய்தியாக்கி இஸ்ரேல் அரசு உலவவிட்டு வருகிறது.

ஹமாஸுக்கு எதிரான தரைவழித் தாக்குதலில் இஸ்ரேல் படைவீரர்களின் இழப்பு எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தரைப்படை அறிவித்துள்ளது.

Related Posts

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!