இஸ்ரேல் நடத்தி வரும் போரால் ஹைஃபா நகரம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாக மேயர் யோனா யாஹாவ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் லெபனான் மற்றும் காசா மீது நடத்தி வரும் ஆக்கிரமிப்பு தாக்குதல்கள் அந்நாட்டிற்கு பெரும் பொருளாதார சரிவைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இஸ்ரேலின் 3வது பெரிய நகரமான ஹைஃபா எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார சீரழிவைச் சந்தித்துள்ளதாக அதன் மேயர் யோனா யாஹாவ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்திற்கு அவர் அளித்துள்ள அறிக்கையில்,ஹைஃபாவின் பொருளாதார மதிப்பு குறைந்தால் அது ஒட்டுமொத்த இஸ்ரேலையும் கடுமையாக பாதிக்கும் என எச்சரித்துள்ளார். மேலும் வடக்கு வலுவாக இருந்தால் மட்டுமே இஸ்ரேல் வலுவாக இருக்கும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வெறிச்சோடி காணப்படும் ஹைஃபா நகர தெருக்கள் குறித்து வேதனை தெரிவித்துள்ள அவர், இஸ்ரேல் நடத்தி வரும் போர், தொழில், விவசாயம், வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகியவை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
அக்டோபர் 2023 மற்றும் ஆகஸ்ட் 2024 க்கு இடையில், மறைமுக சேதங்களுக்காக மொத்தம் 4.4 பில்லியன் ஷேக்கல்கள், அதாவது ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






