“போரால் கடும் பின்னடைவைச் சந்தித்தாலும், இழந்த பலத்தை மீட்டுள்ளதாக ஹிஸ்புல்லாவின் பொதுச் செயலாளர் ஷேக் நயிம் காசிம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கூறியுள்ள அவர், ஹிஸ்புல்லாவின் செயல்பாடுகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது, நமது செயல்பாடுகளில் மாற்றம் இருக்கலாம், அடிப்படை கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.

குறிப்பாக களத்தில் நாம் தொடர்ந்து நிற்கிறோம். லெபனானின் தெற்கு பகுதியில் 5 இடங்களில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு படைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது நாம் பொறுமை காக்க வேண்டிய நேரம். நிச்சயம் அங்கிருந்தும் அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.






Leave a Reply