ஈரானை தாக்கினால் குடிக்க தண்ணீர் இருக்காது! கத்தார் எச்சரிக்கை!

ஈரானில் உள்ள அணு உலைகளை அமெரிக்காவோ, அல்லது இஸ்ரேலோ தாக்கினால், அது வளைகுடா நாடுகளில் குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அல்தானி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வலதுசாரி அமெரிக்க ஊடகவியலாளர் Tucker Carlson க்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, ஈரானின் அணு உலை மீது தாக்குதல் நடத்தினால், அது சுற்றுச்சூழல் பேரழிவிற்கு வழிவகுக்கும்.கடல் தண்ணீர் மிக விரைவில் மாசு படும். 3 நாட்களில் கத்தார், குவைத், அமீரகம் நாடுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு விடும். இந்த குடிநீர் பஞ்சம் விரைவில் மொத்த வளைகுடாவையும் தாக்கும்.

A Conversation With Foreign Minister Sheikh Mohammed bin Abdulrahman Al  Thani of Qatar | Council on Foreign Relations

இது மனிதர்களுக்கு குடிநீர் பஞ்சத்தை மட்டும் ஏற்படுத்தாது, மாறாக ஒட்டுமொத்த கடல் வாழ்வினங்களையும் அழித்து விடும்.வளைகுடா கடலில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை உப்பு நீக்கி அரபு நாடுகள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றன. இயற்கை நன்னீர் தேக்கங்கள் குறைவு. வெயில் காலத்தில் அங்கு தண்ணீர் கிடைக்காது. இவ்வாறு கத்தார் பிரதமர் தெரிவித்துள்ளார்.