ஹிஸ்புல்லா தாக்குதல்! ஆக்கிரமிப்பு வீரர் பலி!

வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் சரமாரி தாக்குதல்; ஆக்கிரமிப்பு வீரர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு.

லெபனான் கிராமங்கள் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களுக்கு, ஹிஸ்புல்லா போராட்டக்குழு பதிலடி கொடுத்து வருகிறது. வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட சரமாரி ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் வீரர் ஒருவர் பலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 3 இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

உயிரிழந்த சார்ஜெண்ட் 20 வயதே ஆன ஏரியல் சோஸ்னோவ் என்றும், இவர் ஜெருசலேமைச் சேர்ந்த 605வது பட்டாலியனில் போரிட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இவர் அவிவிமின் எல்லை பகுதியில் ஹிஸ்புல்லா நடத்திய ராக்கெட் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார்.

லெபனான் மீதான தாக்குதலுக்கு ஏற்கனவே உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், 20 வயதே ஆன இளைஞரின் புகைப்படம் மற்றும் தகவல்களை வெளியிட்டு இஸ்ரேல் ஊடகங்கள் அனுதாபம் தேடி வருகின்றன.

இருப்பினும், பாலஸ்தீனத்தில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் என லட்சக்கணக்கான அப்பாவிகளைக் கொன்று குவித்த இஸ்ரேல், தற்போது லெபனானைக் குறிவைத்து தாக்கி வருவது மக்களிடையே பெரும் அதிர்வலைகளையே ஏற்படுத்தியுள்ளது.