மிரட்டுவதால் 10 பைசா பிரயோஜனம் இல்லை! டிரம்புக்கு பதிலடி!

எதிர்வரும் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்குள் அனைத்து இஸ்ரேல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும், ஒருவர், இருவர் என விடுவிக்கக் கூடாது என்றும் இல்லாவிட்டால், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள இஸ்ரேலை அனுமதிப்போம் என டொனால்டு டிரம்ப் கூறி இருந்தார்.இதுகுறித்து ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள ஹமாஸ் அமைப்பின் அதிகாரி, சமி அபு சுக்ரி, டொனால்டு டிரம்ப்பின் மிரட்டல் வார்த்தைகளால் எந்த பலனும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.போர் நிறுத்த விதிகளை இஸ்ரேல் முறையாக கடைபிடித்தால், கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் இல்லாவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகவே மாறும் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே சனிக்கிழமை விடுதலை செய்யப்பட உள்ள கைதிகளை அமைதியான முறையில் அழைத்து வருவது என்றும், பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என ஆக்கிரமிப்பு அரசாங்கம் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
காசா விவகாரம் பற்றி யாரும் ஊடகங்களில் பேசக் கூடாது என நெதன்யாகுவின் கட்சி தலைவர்களிடம் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.