காசா போரில் கலந்து கொள்ளா விட்டாலும், தனி பாலஸ்தீன நாடு அமைய வேண்டும் என்பதில் சவுதி, அமீரகம், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகள் உறுதி காட்டி வருகின்றன.ஜோர்டான் அதிபர் 2ஆம் அப்துல்லாவை டொனால்டு டிரம்ப் இது சம்பந்தமாக சந்தித்து பேசியுள்ளார். எனினும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வளைகுடா அரசியல் விமர்சகர்கள் டிரம்பின் முடிவை ஒரு போதும் ஜோர்டான் ஏற்றுக் கொள்ளாது எனத் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவின் நிதி நிறுத்தப்பட்டாலும் கூட, ஜோர்டானால் சமாளிக்க முடியும் என்றும், அதே நேரம் டிரம்பின் திட்டத்திற்கு அடி பணிந்தால், அது மன்னர் ஆட்சிக்கே ஆபத்தாக முடிந்து விடும் என எச்சரித்துள்ளனர்.இதே போல் எகிப்து அதிபர் அல் சிசியும் டிரம்பின் திட்டத்தை முற்றிலுமாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளார். மேலும் காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றாமல், மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எகிப்து, அமெரிக்காவிடம் இருந்து நிதி பெறும் நிலையில், பிப்ரவரி 18 ஆம் தேதி, டொனால்டு டிரம்பை , அல் சிசி சந்திக்க இருந்தார். ஆனால், இந்த பயணத்தை அவர் ஒத்தி வைத்துள்ளார்.
இதுகுறித்து நியூ அரப், ஊடகத்துக்கு தெரிவித்துள்ள எகிப்து உயர் அதிகாரிகள், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எகிப்து – அமெரிக்க உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.டிரம்பின் திட்டத்தை எகிப்து நிராகரித்துள்ளது. மேலும் அல்சிசியை குறிப்பிடும் போது, ராணுவ அதிகாரி என டிரம்ப் கூறியுள்ளார். இதுவும் எகிப்து அதிபருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.






Leave a Reply