அமெரிக்காவின் வரலாறே விரோத நடவடிக்கைகள் மற்றும் உறுதியற்ற வாக்குறுதிகளால் நிரம்பி இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.பொருளாதாரத் தடைகள் போன்ற மிரட்டல்களைப் பயன்படுத்துதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்தல் போன்ற மோசமான செயல்களில் அமெரிக்க ஈடுபடுவதாக ஈரான் வெளியுறவு துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.மேலும் ஈரானின் அணுசக்தி ஒப்பந்த்தை அமெரிக்கா மோசமாகப் பின்பற்றுவதாக அறிவித்துள்ளது.

ஈரானின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்று ஈரானியத் தலைவர் சையத் அலி கமேனி அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதே வாஷிங்டனை நம்ப முடியாது என்பதற்கான சான்றாக இருப்பதாக காமேனி சுட்டிக்காட்டியுள்ளார்.அமெரிக்காவால் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ள” MAXIMUM PRESSURE” கொள்கையானது, ஈரானின் தேசிய நலன்களுக்கு எதிரானது என்றும் ஈரானின் வெளி விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.






