இஸ்ரேலிய பணய கைதிகள் 41 பேரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தான் குண்டு வீசிக் கொன்றன என்ற உண்மை வெளியாகியுள்ளது. இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை இதனை உறுதி செய்துள்ளது.மொத்தம் 251 இஸ்ரேலிய ராணுவத்தினர், ஆக்கிரமிப்பாளர்களை ஹமாஸ் காசாவுக்கு பிடித்து வந்தது. அவர்களில் 130 கைதிகளை, கடும் போர்ச் சூழலிலும் காப்பாற்றி, உயிருடன் மீண்டும் இஸ்ரேல் உடன் ஒப்படைத்தது.
தற்போதும் 24 இஸ்ரேலிய கைதிகள் காசாவில் உள்ளனர்.
இஸ்ரேலால் கொல்லப்பட்ட 35 இஸ்ரேலிய கைதிகளின் உடல்களும் காசாவில் உள்ளன. ஏற்கனவே இஸ்ரேலால் கொல்லப்பட்ட 40 இஸ்ரேலியர்களின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளதுஹமாசின் பேரம் பேசும் திறனை குறைப்பதற்காக, நெதன்யாகுவின் உத்தரவின் பேரில், தங்களது சொந்த நாட்டினரையே இஸ்ரேலிய படைகள் வேண்டுமென்றே திட்டமிட்டு, குண்டுவீசிக் கொன்றதாக கைதிகளின் குடும்பத்தினர், இஸ்ரேலிய பத்திரிக்கைகளில் புகாராக தெரிவித்துள்ளனர்.






Leave a Reply