இந்த மாநாட்டில் எகிப்து கொண்டு வந்துள்ள காசா மறு சீரமைப்பு திட்டத்தை அனைத்து அரபு நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளன.இந்தத் திட்டத்தின் அடிப்படையில் காசாவை விரைவாக மீட்டு மறு சீரமைக்கும் முயற்சியை முன்னிறுத்தும் வழிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு நிதியம் மற்றும் உலக வங்கி வழங்கி இருக்கிற ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக இருக்கிறது.இந்தத் திட்டத்தை பாலஸ்தீனியர்களுடன் இணைந்து மற்ற பிற அரபு நாடுகளும் ஒருங்கிணைந்து திட்டத்தை செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் இது அரபு நாடுகளின் உதவியால் காசாவின் உள்கட்டமைப்பை முழுமையாக மீண்டும் கட்டி எழுப்பி அத்தியாவசிய சேவைகளை புதுப்பிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.


மேலும் இந்த உச்சி மாநாட்டில் பாலஸ்தீனியர்களை கட்டாயமாக இடம்பெயரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் திட்டத்தை முழுமையாக நிராகரித்து உள்ளது.அப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டால் அது குற்ற நடவடிக்கையாக பார்க்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த இடப்பெயர்வு திட்டம் இனப்படுகொலை குற்றத்தின் ஒரு பகுதியாக வகைப்படுத்த முடியுமா என்பதை ஒரு அரபு சட்ட குழு ஆராயவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த மாநாடு காசாவிற்கு மனிதாபிமான உதவியை நிறுத்தும் வகையில் சமீபத்தில் இஸ்ரேலால் கொண்டுவரப்பட்ட சில கட்டுப்பாடுகளை கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகவும் சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.மனிதாபிமான உதவிகளை காசா மக்களுக்கு கிடைக்காமல் இஸ்ரேல் தடுத்து இருப்பதால் காசா மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள் என்று குறிப்பிட்டு இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளுக்கு அரபு உச்சி மாநாடு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.






