4 நாட்கள் கெடு!

காசாவுக்கு செல்லும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. முதல்கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதனை ஏப்ரல் மாதம் வரை நீட்டித்துள்ளது இஸ்ரேல். அதே நேரம் 2ஆம் கட்ட போர் நிறுத்தத்திற்கு முன் வராமல் முரண்டு பிடித்து வருகிறார்.2ஆம் கட்டப் போர் நிறுத்தம் என்பது, இஸ்ரேல் படைகள் காசாவை விட்டு முழுமையாக வெளியேறுவது ஆகும். அப்படிச் செய்தால், கைதிகள் மற்றும் இஸ்ரேலியர்களின் உடல்கள் அனைத்தையும் ஒப்படைப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது. ஆனால் காசாவை விட்டு வெளியேறுவது தங்களது படுதோல்வியாக கருதப்படும் என்பதால், அதனை செய்ய முடியாது என இஸ்ரேல் கூறி வருகிறது.அதே நேரம் காசா மக்களை ரமலான் மாதத்தில் துன்புறுத்தும் வகையில், அங்கு சென்று வந்த அனைத்து நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.


இந்த நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஏமன் அன்சர் அல்லா இயக்கத்தின் தலைவரும், அந்நாட்டின் அரசியல் உயர்மட்டத் தலைவருமான சையது மாலிக் அல் ஹவுத்தி, இஸ்ரேலின் இந்த முற்றுகை நீடித்தால், ஏமன் படைகளும் கடல் முற்றுகை தாக்குதலை மீண்டும் தொடங்குவோம் என அறிவித்துள்ளார்.முன்னர் 16 மாதங்கள் நீடித்த ஏமன் படைகளின் கடல் முற்றுகையால், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.