ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

அமெரிக்கா – ஹமாஸ் இடையேயான பேச்சுவார்த்தை நல்ல பலனை கொடுத்து வருவதாக அமெரிக்க தூதர் ஆதம் போக்லர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவே நேரடியாக ஹமாசுடன் பேசுவதால் இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.2 வாரங்களில் அனைத்து கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் முன்வைத்துள்ள நிபந்தனைகளையும் அவர் விளக்கியுள்ளார்.

Release hostages now or you're dead: Trump after US holds talks with Hamas

 

அதாவது 5 முதல் 10 ஆண்டுகள் போர் நிறுத்தம் மேற்கொள்வது, அதற்குள் ஆயுதங்களை கீழே போடுவது, அதற்கு பிறகு, காசாவின் அரசியலில் இருந்து முழுவதுமாக வெளியேறுவது போன்ற செயல்பாடுகளுக்கு ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.ஹமாசின் இந்த முன்மொழிவை எடுத்த எடுப்பில் நிராகரித்து விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.ஹமாசுடன் பேசுவதால், டொனால்டு டிரம்ப் இஸ்ரேலை கை விட்டு விட்டார் என்று கருதக் கூடாது, எப்போதும் டிரம்ப் இஸ்ரேல் மக்களுக்காக நிற்பார் என ஆதம் கூறியுள்ளார்.