காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு நீக்கும் தண்ணீர் ஆலையும் மூடப்பட்டது. இதனால் குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. இதனை வாயால் ...
வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளதாக காமெனி தெரிவித்துள்ளார். ...
காசா மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும், காசாவை ரிவேரியாவாக அதாவது, கடல் சுற்றுலாத் தலமாக மாற்றப் போகிறோம், காசாவை அமெரிக்கா கைப்பற்ற உள்ளது போன்ற பல விநோத அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் டொனால்டு டிரம்ப். ஆனால் இதனை அமெரிக்காவின் நெருங்கிய அரபு நட்பு நாடுகளான சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான் நாடுகள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.இதனிடையே ...
சீனா, ரஷ்யா, ஈரான் நாடுகளின் கடற்படைகள் இணைந்து கூட்டு ராணுவ ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடும் மிரட்டல்களை விடுத்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஹவுத்திப் படைகள் மீண்டும் கடற் தாக்குதல்களை தொடங்கிய நிலையில், இந்த ஒத்திகை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.Maritime Security Belt 2025 என்ற பெயரில் பாதுகாப்பு ...
அமெரிக்கா – ஹமாஸ் இடையேயான பேச்சுவார்த்தை நல்ல பலனை கொடுத்து வருவதாக அமெரிக்க தூதர் ஆதம் போக்லர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவே நேரடியாக ஹமாசுடன் பேசுவதால் இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.2 வாரங்களில் அனைத்து கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் முன்வைத்துள்ள நிபந்தனைகளையும் அவர் விளக்கியுள்ளார். அதாவது 5 முதல் 10 ...
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.இந்தப் பேச்சுவார்த்தையில் கத்தார், எகிப்து, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், அதனை ஏப்ரல் மாதம் வரை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.2ஆம் கட்ட போர் நிறுத்தத்தை இஸ்ரேல் தொடங்காததால், ஹமாசும் கைதிகள் விடுதலையை நிறுத்தி ...
“போரால் கடும் பின்னடைவைச் சந்தித்தாலும், இழந்த பலத்தை மீட்டுள்ளதாக ஹிஸ்புல்லாவின் பொதுச் செயலாளர் ஷேக் நயிம் காசிம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கூறியுள்ள அவர், ஹிஸ்புல்லாவின் செயல்பாடுகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது, நமது செயல்பாடுகளில் மாற்றம் இருக்கலாம், அடிப்படை கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. குறிப்பாக களத்தில் நாம் தொடர்ந்து நிற்கிறோம். லெபனானின் தெற்கு பகுதியில் 5 இடங்களில் ...
சிரியாவின் புதிய இறைமறுப்பு ஆட்சியாளர்கள் நிராயுதபாணிகளை இனப்படுகொலை செய்வதை ஏமன் தலைவர் சையது மாலிக் அல் ஹவுத்தி கண்டித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,“சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் அமெரிக்கா, இஸ்ரேலின் அடிமைகளாக செயல்படுகின்றனர்”“இந்த இறைமறுப்பு ஆட்சியாளர்களுக்கு பணம், ஆயுதம், ஆதரவு வழங்குவர்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.சிரியாவில் உள்ள “சுவெய்டா பகுதியில் வசிக்கும் ட்ரூஸ் மக்கள் இஸ்ரேலை ஆதரிப்பவர்கள். ...
இஸ்ரேலிய பணய கைதிகள் 41 பேரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தான் குண்டு வீசிக் கொன்றன என்ற உண்மை வெளியாகியுள்ளது. இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை இதனை உறுதி செய்துள்ளது.மொத்தம் 251 இஸ்ரேலிய ராணுவத்தினர், ஆக்கிரமிப்பாளர்களை ஹமாஸ் காசாவுக்கு பிடித்து வந்தது. அவர்களில் 130 கைதிகளை, கடும் போர்ச் சூழலிலும் காப்பாற்றி, ...
உலகம் முழுவதும் மகளிர் தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்ட நிலையில், காசா மகளிரோ, கண்ணீருடன் அனுசரித்துள்ளனர். இதுகுறித்து வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.காசாவில் சுமார் 12,316 பெண்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.காயம் அடைந்த 2000 பெண்கள், சிறுமிகளின் கை அல்லது கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.சுமார் 13,901 பெண்கள் கணவனை இழந்து விதவைகள் ஆகியுள்ளனர். 17,000 தாய்மார்கள் ...










