உலகம் முழுவதும் மகளிர் தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்ட நிலையில், காசா மகளிரோ, கண்ணீருடன் அனுசரித்துள்ளனர். இதுகுறித்து வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.காசாவில் சுமார் 12,316 பெண்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.காயம் அடைந்த 2000 பெண்கள், சிறுமிகளின் கை அல்லது கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.சுமார் 13,901 பெண்கள் கணவனை இழந்து விதவைகள் ஆகியுள்ளனர்.

17,000 தாய்மார்கள் தங்களது குழந்தைகளை இழந்துள்ளனர். 50,000 பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களின் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.காணாமல் போன பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை 14,222 ஆக உள்ளது. இவர்கள் மரணமடைந்து, அவர்களின் உடல்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.சுமார் 10,000 குழந்தைகள் தங்களது தாயை இழந்துள்ளனர்.






Leave a Reply