https://edition.cnn.com/2025/02/14/middleeast/israel-announces-names-of-three-hostages-intl/index.htmlபோர்நிறுத்தம் அமலுக்கு வந்ததற்கு பிறகு மட்டும் சுமார் 100 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் கொன்றுள்ளன. நிவாரணப் பொருட்களையும் தடுத்து வந்தனர். இதனையடுத்து, கைதிகள் விடுதலையை நிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சனிக்கிழமைக்குள் அனைத்து இஸ்ரேலிய கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால், ஹமாசுக்கு நரகத்தை காட்டுவேன் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்தார். ஆனால் இதனை புறக்கணித்த ஹமாஸ், வெற்று மிரட்டல்களால் ஒன்றும் செய்து விட முடியாது, நாங்கள் சொல்வதை மட்டும் ஒழுங்காக கேளுங்கள் என பதிலடி கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து போர்நிறுத்தம் தொடர்ந்து வெற்றி பெற, கத்தார், எகிப்து நாடுகள் தங்களது இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தின. இதனையடுத்து, ஏற்கனவே திட்டமிட்டபடி, சனிக்கிழமை 3 இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அறிவித்தது.இதனையடுத்து, சனிக்கிழமை Alexander Trufanov, Sagui Dekel-Chen மற்றும் Yair Horn ஆகிய 3 இஸ்ரேலிய ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறைகளில் கடும் கொடுமைகளை அனுபவித்து வந்த 369 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.






