https://edition.cnn.com/2025/02/14/middleeast/israel-announces-names-of-three-hostages-intl/index.htmlபோர்நிறுத்தம் அமலுக்கு வந்ததற்கு பிறகு மட்டும் சுமார் 100 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் கொன்றுள்ளன. நிவாரணப் பொருட்களையும் தடுத்து வந்தனர். இதனையடுத்து, கைதிகள் விடுதலையை நிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சனிக்கிழமைக்குள் அனைத்து இஸ்ரேலிய கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால், ஹமாசுக்கு நரகத்தை காட்டுவேன் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்தார். ...
காசா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏமன் ஹவுத்திப் படைகள் இஸ்ரேலுக்கு எதிரான கடல் முற்றுகை போராட்டத்தை 15 மாதங்களாக நடத்தினர். காசாவில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து, அவர்களும் தங்களது நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்தனர். இந்த நிலையில், காசாவை முழுமையாக அமெரிக்கா கைப்பற்றும் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதற்கு உலக நாடுகள் ...
அமெரிக்காவின் வரலாறே விரோத நடவடிக்கைகள் மற்றும் உறுதியற்ற வாக்குறுதிகளால் நிரம்பி இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.பொருளாதாரத் தடைகள் போன்ற மிரட்டல்களைப் பயன்படுத்துதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்தல் போன்ற மோசமான செயல்களில் அமெரிக்க ஈடுபடுவதாக ஈரான் வெளியுறவு துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.மேலும் ஈரானின் அணுசக்தி ஒப்பந்த்தை அமெரிக்கா மோசமாகப் பின்பற்றுவதாக அறிவித்துள்ளது. ...
காசா போரில் கலந்து கொள்ளா விட்டாலும், தனி பாலஸ்தீன நாடு அமைய வேண்டும் என்பதில் சவுதி, அமீரகம், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகள் உறுதி காட்டி வருகின்றன.ஜோர்டான் அதிபர் 2ஆம் அப்துல்லாவை டொனால்டு டிரம்ப் இது சம்பந்தமாக சந்தித்து பேசியுள்ளார். எனினும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வளைகுடா அரசியல் விமர்சகர்கள் டிரம்பின் முடிவை ...
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை கூறாமல் தவிர்த்து வந்த அதன் ஆட்சியாளர் அகமது அல் சாரா முதன் முறையாக, டிரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார்.டொனால்டு டிரம்பின் கருத்து கடுமையான குற்றம் என சாடியுள்ள அவர், அது இறுதியில் தோல்வியில் தான் முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.மண்ணின் மைந்தர்களை அவர்களின் நிலங்களில் ...
காசா மக்கள் தங்களது நிலங்களை தன்னிடம் விற்பனை செய்து விட்டு, அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர்களை எகிப்து, ஜோர்டான் நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் டொனால்டு டிரம்ப் வினோத கருத்தை கூறி வருகிறார்.இதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். காசாவை எப்படி கையாள்வது என்று தெரியாமல் இஸ்ரேல் இருந்த நிலையில், டொனால்டு டிரம்ப் இந்த ...
எதிர்வரும் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்குள் அனைத்து இஸ்ரேல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும், ஒருவர், இருவர் என விடுவிக்கக் கூடாது என்றும் இல்லாவிட்டால், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள இஸ்ரேலை அனுமதிப்போம் என டொனால்டு டிரம்ப் கூறி இருந்தார்.இதுகுறித்து ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள ஹமாஸ் அமைப்பின் அதிகாரி, சமி அபு சுக்ரி, டொனால்டு ...
இதுகுறித்து ஹமாசின் ராணுவப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிர்வாகம் தொடர்ந்து உடன்படிக்கையை மீறி செயல்பட்டு இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கான பிராயச்சித்தம் கிடைக்கும் வரை, கைதிகள் விடுதலையை நிறுத்தி வைக்கிறோம்.வடக்கு காசாவுக்கு திரும்புபவர்களை காத்திருக்க வைப்பது, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்துவது, நிவாரணப்பொருட்களை ...
காசா மக்களை அங்கிருந்து யாராலும் வெளியேற்ற முடியாது, என்றும் அதனை துருக்கி அனுமதிக்காது என அந்நாட்டின் அதிபர் தையிப் எர்டோகான் தெரிவித்துள்ளார்.செய்தியாளர் கூட்டத்தில் பேசிய எர்டோகன், பாலஸ்தீனிய மக்களை அவர்களது தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றும் எந்தவொரு திட்டத்தையும் துருக்கி உறுதியாக எதிர்க்கிறது என்பதை தெளிவுபடுத்தினார்.”எங்கள் கண்ணோட்டத்தில், சியோனிச லாபியின் அழுத்தத்தின் கீழ் டிரம்ப் இந்த கருத்தை ...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படைகள் கொடூரமான தாக்குதலை நடத்தி கருவில் உள்ள குழந்தையுடன் கர்ப்பிணி பாலஸ்தீனியப் பெண்ணை கொடூரமாக கொலை செய்துள்ளனர். மேற்கு கரை பாலஸ்தீனப் பகுதிகள் முழுவதும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில். இந்தத் தாக்குதல் , மனித உரிமைக் குழுக்கள் மற்றும் பாலஸ்தீனிய ...










